"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்

தமிழில் "கிரெம்ளின் மாளிகை" -ரசிய அதிபர் மாளிகை

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
...
ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

கிராமமும் விவசாயமும்...

ஒரு நாட்டின் இதயம் அந்த நாட்டின் கிராமங்கள்தான்.ஆனால் இன்று அந்த இதயம் பலவீனம் அடைந்து வருகிறது,ஆம்! கிராமங்கள் காலியாகிவருகின்றன காரணம் வசதிகள்.

நமது சாதனைகளாக கணினிகள் செயற்க்கைகோள்கள் என நீண்டு கொண்டே போகலாம் ஆனால், இவையெல்லாம் கிராமங்களை புறம்தள்ளி செயல்படுத்தபடுமேயானாள் அவன் தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறான் என்பது மட்டும் உறுதி. பல சாதனைகளை செய்துகொண்டுவரும் மனிதனுக்கு உணவு அளிப்பதற்க்கு கிராமங்களால் மட்டும் தான் முடியும் ஆனால், அந்த கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை வசதிகளை செய்து கொடுப்பதில் நான் வாழும் என் தமிழகமானது மிகவும் பின் தங்கிஉள்ளது. சாலைகளும் மின்சாரமும் மட்டும் ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளாக தற்பொழுது இருக்க முடியாது விவசாயத்திற்க்கு தேவையான நீர்
ஆதாரங்களை உருவாக்கி தருவதுதான் இன்றைய கிராமத்தின் அடிப்படை வசதியாக இருக்கமுடியும்


எந்திரன் இதயத்திலிருந்து...


இது எந்திரன் பீவர் காலம். உங்கள் இதயத்தில் யார் இடம்பிடித்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஒரு எந்திர இதயத்தில் முழு இத்தாலியும் இடம்பிடித்திருக்கிறது. நிரந்தரமாகப் இயங்கக்கூடிய முற்றிலும் செயற்கையாக வடிவைக்கப்பட்ட ஓர் இதயம், 15 வயதே ஆன ஒரு இத்தாலி சிறுவனுக்கு பொருத்தப்பட்ட சம்பவம், மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களால், இச்சிறுவனின் பெயர் உட்பட மேலதிக விபரங்களை வெளியிட மருத்துவர்கள் விரும்பாத போதும், தொடர்ந்து 10 மணித்தியால அறுவை சிகிச்சை மூலம் இத்தாலிய வைத்தியர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்பது தான் மருத்துவ உலகில் நீண்டகாலத்திற்கு பிறகு கிடைத்த ஒரு ஆரோக்கியமான தகவல். சரி இது பற்றி விரிவான ஒரு பார்வை

அச்சிறுவனுக்கு என்னதான் பிரச்சினை? என்ன தீர்வு?

தேவையற்ற சதைக்கழிவுகளில் அவனது இதயத்தில் காணப்பட்டமையினால், உடனடி மாற்று இதயம் பொருத்தப்பட வேண்டியிருந்தது.
ஆனால் வழமை போல இன்னொரு இயற்கை மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு அவன் தகுதியடையவில்லை என்பது தான், மருத்துவர்களின் கவலை.

மரணத்திற்கு அருகாமையிலேயே சென்று விட்டான் அவன். வேறு வழியில்லையெனும் போது, இத்தாலிய மருத்துவர்களின் யோசனையில் உதித்தது இச்செயற்கை இதயம்.



யார் சிகிச்சையை நடத்தினார்கள்? எங்கு நடந்தது?

"தனி நாடு பெறுவோம் தமிழனாய் வாழ"

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!
தமிழன் உலகம் முழுவதும் இருப்பான் ஆனால் அவனுக்கென்று என்று ஒரு நாடு கிடையாது என்பதை புலவர் அப்பொழுதே சொல்லி விட்டார் போலும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய முத்த மொழி நம் தமிழ் செம்மொழி. ஆனால் அந்த மொழிக்கு இன்று வரை ஒரு தனி நாடு இல்லையம்.
உலகதமிழ் செம்மொழி மாநாடு நடத்திய கருணாநிதி அந்த மொழிக்கென்று தனிநாடு பெற்றுத்தர மறந்துவிட்டார் இல்லை,இல்லை மறுத்துவிட்டார்.
பொதுநலம் மட்டுமே தன் நலமாக கொண்டு வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜரும்,பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ்யை பிரித்து பங்களாதேஷ் மக்கள் சுதந்திரமாக வாழ வழிவகுத்த இந்திராகாந்தி அம்மையாரும் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது இருக்கும் தமிழின துரோகிகளால் நமது இனம் நய வஞ்சகமான முறையில் பழி தீர்க்கப்பட்டது
தமிழர்களுக்கு தனி நாடு உருவாவதர்க்கான சூழ்நிலையை தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவக்கபட்டபோதிலும்,தமிழ் இனத்தில் அன்றைய எட்டப்பன் காலத்தில் தொடங்கிய காட்டிக்கொடுத்தல்  இன்றைய தமிழின துரோகி கருணா வரை தொடர்ந்ததாலும்,நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினாலும் அந்த வாய்ப்பை நாம் தவறவிட்டோம் இதற்க்கு முழுக்க முழுக்க கரணம் நாமே,நமது ஒற்றுமையின்மையே இதனாலையே பழமையும் ,வளமையும்,செழுமையும்,திறமையும் கொண்ட நாம் தமிழ் இனம் இன்று வரை அடிமைபட்டுகிடக்கிறது