"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

கிராமமும் விவசாயமும்...

ஒரு நாட்டின் இதயம் அந்த நாட்டின் கிராமங்கள்தான்.ஆனால் இன்று அந்த இதயம் பலவீனம் அடைந்து வருகிறது,ஆம்! கிராமங்கள் காலியாகிவருகின்றன காரணம் வசதிகள்.

நமது சாதனைகளாக கணினிகள் செயற்க்கைகோள்கள் என நீண்டு கொண்டே போகலாம் ஆனால், இவையெல்லாம் கிராமங்களை புறம்தள்ளி செயல்படுத்தபடுமேயானாள் அவன் தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறான் என்பது மட்டும் உறுதி. பல சாதனைகளை செய்துகொண்டுவரும் மனிதனுக்கு உணவு அளிப்பதற்க்கு கிராமங்களால் மட்டும் தான் முடியும் ஆனால், அந்த கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை வசதிகளை செய்து கொடுப்பதில் நான் வாழும் என் தமிழகமானது மிகவும் பின் தங்கிஉள்ளது. சாலைகளும் மின்சாரமும் மட்டும் ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளாக தற்பொழுது இருக்க முடியாது விவசாயத்திற்க்கு தேவையான நீர்
ஆதாரங்களை உருவாக்கி தருவதுதான் இன்றைய கிராமத்தின் அடிப்படை வசதியாக இருக்கமுடியும்