"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

"தனி நாடு பெறுவோம் தமிழனாய் வாழ"

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!
தமிழன் உலகம் முழுவதும் இருப்பான் ஆனால் அவனுக்கென்று என்று ஒரு நாடு கிடையாது என்பதை புலவர் அப்பொழுதே சொல்லி விட்டார் போலும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய முத்த மொழி நம் தமிழ் செம்மொழி. ஆனால் அந்த மொழிக்கு இன்று வரை ஒரு தனி நாடு இல்லையம்.
உலகதமிழ் செம்மொழி மாநாடு நடத்திய கருணாநிதி அந்த மொழிக்கென்று தனிநாடு பெற்றுத்தர மறந்துவிட்டார் இல்லை,இல்லை மறுத்துவிட்டார்.
பொதுநலம் மட்டுமே தன் நலமாக கொண்டு வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜரும்,பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ்யை பிரித்து பங்களாதேஷ் மக்கள் சுதந்திரமாக வாழ வழிவகுத்த இந்திராகாந்தி அம்மையாரும் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது இருக்கும் தமிழின துரோகிகளால் நமது இனம் நய வஞ்சகமான முறையில் பழி தீர்க்கப்பட்டது
தமிழர்களுக்கு தனி நாடு உருவாவதர்க்கான சூழ்நிலையை தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவக்கபட்டபோதிலும்,தமிழ் இனத்தில் அன்றைய எட்டப்பன் காலத்தில் தொடங்கிய காட்டிக்கொடுத்தல்  இன்றைய தமிழின துரோகி கருணா வரை தொடர்ந்ததாலும்,நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினாலும் அந்த வாய்ப்பை நாம் தவறவிட்டோம் இதற்க்கு முழுக்க முழுக்க கரணம் நாமே,நமது ஒற்றுமையின்மையே இதனாலையே பழமையும் ,வளமையும்,செழுமையும்,திறமையும் கொண்ட நாம் தமிழ் இனம் இன்று வரை அடிமைபட்டுகிடக்கிறது

"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"



'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள்.
எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். "தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம்.

சீக்கிய உரோமத்துக்குள்ள மதிப்பு, தமிழன் உயிருக்கு இல்லையா? - சீமான் சீற்றம்

60 வருடங்களாக தொடரும் நம் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு வெறும் அறிக்கையை மட்டும் விடுத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இலங்கை கடற்படையினரின் அத்து மீறல்கள் தொடர்கின்றது.

பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா? என்று சீறியுள்ளார் சீமான் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை வருமாறு

இலங்கை மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த ரஷ்யா ஆதரவு அளிக்க வேண்டும்.


1976இல் தந்தை செல்வா தலைமையில், தமிழர்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கையில் வட்டுக்கோட்டை என்னுமிடத்தில் இனி, சிங்கள இனவெறி அரசின் ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழவே இயலாது என்பதால், ஒரே தீர்வாகத் தனிதாயகத் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராட முடிவெடுத்தனர் என செந்தமிழ்சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் இன்றைக்கு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, மொரீசியஸ், பிஜி, கயானா, ஆஸ்திரேலியா எனச் சுமார் 200 நாடுகளில் 100 மிலியன் மக்களுக்கு மேல் வாழ்கின்ற பழமை வாய்ந்த ஒரே இனம் தமிழர்களாவர்