"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

எந்திரன் இதயத்திலிருந்து...


இது எந்திரன் பீவர் காலம். உங்கள் இதயத்தில் யார் இடம்பிடித்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஒரு எந்திர இதயத்தில் முழு இத்தாலியும் இடம்பிடித்திருக்கிறது. நிரந்தரமாகப் இயங்கக்கூடிய முற்றிலும் செயற்கையாக வடிவைக்கப்பட்ட ஓர் இதயம், 15 வயதே ஆன ஒரு இத்தாலி சிறுவனுக்கு பொருத்தப்பட்ட சம்பவம், மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களால், இச்சிறுவனின் பெயர் உட்பட மேலதிக விபரங்களை வெளியிட மருத்துவர்கள் விரும்பாத போதும், தொடர்ந்து 10 மணித்தியால அறுவை சிகிச்சை மூலம் இத்தாலிய வைத்தியர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்பது தான் மருத்துவ உலகில் நீண்டகாலத்திற்கு பிறகு கிடைத்த ஒரு ஆரோக்கியமான தகவல். சரி இது பற்றி விரிவான ஒரு பார்வை

அச்சிறுவனுக்கு என்னதான் பிரச்சினை? என்ன தீர்வு?

தேவையற்ற சதைக்கழிவுகளில் அவனது இதயத்தில் காணப்பட்டமையினால், உடனடி மாற்று இதயம் பொருத்தப்பட வேண்டியிருந்தது.
ஆனால் வழமை போல இன்னொரு இயற்கை மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு அவன் தகுதியடையவில்லை என்பது தான், மருத்துவர்களின் கவலை.

மரணத்திற்கு அருகாமையிலேயே சென்று விட்டான் அவன். வேறு வழியில்லையெனும் போது, இத்தாலிய மருத்துவர்களின் யோசனையில் உதித்தது இச்செயற்கை இதயம்.



யார் சிகிச்சையை நடத்தினார்கள்? எங்கு நடந்தது?